கோவை அருகே விபத்து - நிதி நிறுவன ஊழியர் பலி
கவுண்டம்பாளையம்:
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் ஆண்டிக்கல். இவரது மகன் பாண்டியன் (19). இவர் கோவை ரத்தினபுரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது நண்பர் ராமச்சந்திரனுடன் (22) மோட்டார் சைக்கிளில் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை- தாளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர் காசிமாயனை பிடித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.