செய்திகள்

மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஆசிரியர் பலி

Published On 2019-02-25 17:56 GMT   |   Update On 2019-02-25 17:56 GMT
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆசிரியர் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இளையான்குடி:

இளையான்குடியை அடுத்த பூச்சியேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபாபு (வயது 35). இவர் திருவேங்கடம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலா (27) என்பவருடன் ஒரு மோட்டார்சைக்கிளில் காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

இளையான்குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலையில் மாதவநகர் அருகே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் தனபாபு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலா பலத்த காயத்துடன் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News