அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் படுதோல்வி அடையும்- தங்க தமிழ்செல்வன் பேட்டி
மதுரை:
மதுரை பாண்டி கோவிலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணபலம்தான் உள்ளது. மக்கள் பலம் இல்லை. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் எண்ணம் எடுபடாது. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெறும். அ.ம.மு.க. கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம்.
ஜெயலலிதாவுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. அ.தி.மு.க.வை கேவலமாக விமர்சித்த பா.ம.க.வுடனான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி யாகும்.
விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சிப்பது தவறான செயலாகும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் தேர்தலில் படுதோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெற்று தமிழக உரிமைகளை பெற பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #dmk