செய்திகள்

தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2019-02-25 09:05 GMT   |   Update On 2019-02-25 10:14 GMT
தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
சேலம்:

சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?

பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.

கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே?


ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
Tags:    

Similar News