செய்திகள்

ராஜபாளையத்தில் மாயமான வாலிபர் மலைப்பகுதியில் பிணமாக கிடந்தார்

Published On 2019-02-13 12:04 GMT   |   Update On 2019-02-13 12:04 GMT
ராஜபாளையத்தில் மாயமான வாலிபர் மலைப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வனத்துறையினர் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி சவுந்தரபாண்டியன் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் முருகானந்தம் (வயது 39). திருமணமாகவில்லை. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தாய் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் முருகானந்தத்தின் தாயார் இறந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முருகானந்தம், அதன்பின்னர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து தந்தை முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோட்டை மலை கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் முருகானந்தம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News