செய்திகள்

துடியலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலி

Published On 2019-02-11 09:36 GMT   |   Update On 2019-02-11 09:36 GMT
துடியலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

மதுரை மாவட்டம் மனக்காலகுடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தடாகம் அருகே உள்ள ஆனைகட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த யானை லட்சுமணனை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News