உலகம்

இயேசு ஓவியத்தை ஏலம் விட்டு ரூ.23 கோடி நிதி திரட்டிய டிரம்ப்

Published On 2026-01-01 18:31 IST   |   Update On 2026-01-01 18:31:00 IST
  • ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
  • மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) இல்லத்தில் ஒரு தொண்டு நிறுவன ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.

வெனெசா ஹோரபியூனா என்ற பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியர், மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில் இயேசு ஓவியத்தை சுமார் ரூ.23 கோடிக்கு விற்றார்.

டிரம்ப் அந்த ஓவியத்தில் தனது கையெழுத்தைப் போட்ட பிறகு, அதன் மதிப்பு உயர்ந்து இறுதியில் $2.75 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹23 கோடி ஆகும்.

வெனெசா ஹோரபியூனா என்ற ஓவியர் வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் டிரம்ப் St. Jude's குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தின் தொண்டு பணிகளுக்காக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News