செய்திகள்
கறுப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது - தமிழிசை பாய்ச்சல்
கறுப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP
ஆலந்தூர்:
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மட்டும் கறுப்புக்கொடி காட்டி இருக்கிறார். பா.ஜனதா பெண் தொண்டரை தாக்கி இருக்கிறார்கள்.
கறுப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எங்களுக்கும் கறுப்புக் கொடி காட்டத் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் தான் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கூறிய 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விவசாயிகளை கொன்றது தி.மு.க. தற்போது பா.ஜனதாவை ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP