புதிய நடைபயணம்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு- என்.டி.ஏ. அரசு மீதும் குற்றச்சாட்டு
- இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாம் மற்றொரு நடைபயணத்தை தொடங்க இருக்கிறோம்.
- மக்களின் பிரச்சினைகளுக்கான நான் தொடர்ந்து போராடுவேன்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய நடைபயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தடேபல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எலுரு சட்டசபை தொகுதியில் இருந்து வந்திருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாம் மற்றொரு நடைபயணத்தை தொடங்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளுக்கான நான் தொடர்ந்து போராடுவேன். எலுரு தொகுதியில் கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் வலியுறுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயக ஆட்சியில் அனைத்து அமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. என்டிஏ கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு எந்தவொரு உண்மையான நன்மைகளையும் வழங்கத் தவறிவிட்டது.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி 2027 மத்தியில் நடைபயணத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது.