செய்திகள்
25 பவுன் நகை-பணத்துடன் கல்லூரி மாணவி மாயம்
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நகை-பணத்துடன் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.