செய்திகள்

அரியூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தை சாலை மறியல்

Published On 2019-02-07 12:18 GMT   |   Update On 2019-02-07 12:18 GMT
வேலூர் அடுத்த அரியூரில் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த அரியூரில் விஸ்வநாதன் நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் இன்று அரியூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News