செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்

Published On 2019-01-30 05:15 GMT   |   Update On 2019-01-30 05:15 GMT
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார். #JactoGeo
தர்மபுரி:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர வேண்டும் அல்லது சேருவதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்றும், அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

மேலும், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் யார் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி கூறினார்.

இன்று வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.  #JactoGeo


Tags:    

Similar News