லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் இ.பி.எஸ்... தரம் வாய்ந்த மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம் - மு.க.ஸ்டாலின்
- அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
- சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
* ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.
* 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.
* சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.
* 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
* டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.