செய்திகள்
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல்
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி பாவேந்தர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). பெரியகடை வீதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரியும் பொந்து கண்ணன் என்ற மணிமாறனுடன் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மணிமாறன் மாரியப்பனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூத் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மொட்டணம்பட்டி கல்லறை பகுதியில் பதுங்கி இருந்த மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.