என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » employee attack
நீங்கள் தேடியது "employee attack"
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி பாவேந்தர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). பெரியகடை வீதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரியும் பொந்து கண்ணன் என்ற மணிமாறனுடன் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மணிமாறன் மாரியப்பனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூத் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மொட்டணம்பட்டி கல்லறை பகுதியில் பதுங்கி இருந்த மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடையின் அருகே பண்ருட்டி தண்டுபாளையம் பகுதியை சேர்ந்த அஜீத் (17) என்பவர் மது குடித்து கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மாறன், இந்த இடத்தில் இருந்து மது அருந்தக்கூடாது என்று அஜீத்திடம் கூறினார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜீத், அருகில் கிடந்த இரும்பு குழாயால் மாறனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் படுகாயம் அடைந்த மாறனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் மாறன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குப்பதிவு செய்து அஜீத்தை கைது செய்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X