செய்திகள்

கும்பகோணத்தில் ரவுடி வெட்டி படுகொலை- போலீசார் விசாரணை

Published On 2019-01-14 10:02 GMT   |   Update On 2019-01-14 10:02 GMT
கும்பகோணத்தில் ரவுடியை படுகொலை செய்து தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல் (வயது 23). ரவுடியான இவர் மீது கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் மோரி வாய்கால் அருகே உள்ள ஒரு தொட்டியில் அரிவாள் வெட்டு காயங்களுடன் சக்திவேல் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட சக்திவேல் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி சக்திவேலை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சக்திவேலுவுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சக்திவேலை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். வாலிபரை கொலை செய்து தொட்டியில் வீசி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

Tags:    

Similar News