செய்திகள்

துரைப்பாக்கத்தில் செல்போனை திருடி ரூ.5 ஆயிரம் கேட்டவர் கைது

Published On 2019-01-08 06:48 GMT   |   Update On 2019-01-08 06:48 GMT
துரைப்பாக்கத்தில் செல்போனை திருடி ரூ.5 ஆயிரம் கேட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருபவர் காமராஜ்.

இவர் இரவு அறையில் தூங்கி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது செல்போன் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் காமராஜ் தனது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர் நான்தான் செல்போனை திருடி உள்ளேன். 5000ரூபாய் கொடுத்தால் தான் செல்போனை கொடுக்க முடியும். திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்.

இது குறித்து காமராஜ் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில் திருவான்மியூர் சென்று பணத்தை கொடுத்து விட்டு செல்போனை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News