செய்திகள்
திண்டுக்கல் அருகே சாலை அமைக்க கோரி கிராம மக்கள் திடீர் மறியல்
திண்டுக்கல் அருகே சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியே செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் கோட்டைபட்டியில் திடீர் என மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.