செய்திகள்

தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பலி

Published On 2019-01-05 10:08 GMT   |   Update On 2019-01-05 10:08 GMT
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மீட்டு பக்தா, சுரேந்தர் தாஸ், கபில் திவாரி ஆகியோர் பழைய இரும்பு துண்டுகளை பாய்லரில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்து திடீரென இரும்பு துண்டுகள் 3 பேர் மீதும் விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த மீட்டு பக்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News