செய்திகள்

வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலி

Published On 2018-12-25 12:11 IST   |   Update On 2018-12-25 12:11:00 IST
வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (பெயர் மாற்றம்). இவர் தனது உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் (பெயர் மாற்றம்) என்பவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சங்கீதாவின் குடும்பத்தினர் அவரை வேறொருவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சங்கீதா காதலனை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.

நேற்று இருவரும் வயல் வெளியில் எலி மருந்து குடித்தனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் கண்ட கிராமத்தினர் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News