செய்திகள்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலின் விருப்பம் - முதலமைச்சர் பேட்டி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
கோவை:
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான ஒப்பந்தம் விரைவில் முடிவு செய்யப்படும். விதிகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி அறிவிக்கும் சூழல் உருவாகும். அப்போது தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami