செய்திகள்

திருப்போரூர் அருகே மதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2018-12-14 09:54 GMT   |   Update On 2018-12-14 09:54 GMT
திருப்போரூர் அருகே மதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (55). ம.தி.மு.க. பிரமுகர். அங்குள்ள கல்குவாரியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை கொட்டமேடு பகுதிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ஏழுமலையை தாக்கியதாக அந்த பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (32), ஏழுமலை (30) ஆகியோரை மானாம்பதி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News