செய்திகள்

பள்ளிக்கு மாணவிகள் வெள்ளி கொலுசு அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-01 13:01 IST   |   Update On 2018-12-01 13:01:00 IST
பள்ளிக்கு வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
கோபி:

கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

கஜா புயல் காரணமாக விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி கஜா புயல் காரணமாக வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது புதியதாக 750 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


அவரிடம் மாணவிகள் பூ வைக்கவும், கொலுசு அணியவும் பள்ளிக்கல்வித்துறை சார்வில் தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  "மாணவர்கள் பள்ளிக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும். மாணவிகள் பூ வைத்து வர எந்த தடையும் இல்லை" என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News