செய்திகள்

குமரியில் புதுப்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2018-11-29 08:03 GMT   |   Update On 2018-11-29 08:03 GMT
குமரியில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே குமார புரம் கைதோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சிவநந்தினி(வயது19).

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 மாதமாகிறது. சிவநந்தினி நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிவநந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் சாந்தி கொற்றியோடு போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது 2-வது மகள் சிவநந்தினியை எனது கணவர் முத்துக்கிருஷ்ணனின் தங்கை மகன் சுரேசுடன் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை. வரதட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

இந்தநிலையில் சிவநந்தினி நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்து விட்டதாக கூறி உள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கிறிஸ்துராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 2 மாதமே ஆவதால் தக்கலை சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்...

கீரிப்பாறை லேபர் காலனியைச் சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் தேவதாஸ்(22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 26-ந்தேதி வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மனைவி ஜெயந்தி(36). இவர் நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரம் முன்னீர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(49). இவர் வி‌ஷம் குடித்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News