செய்திகள்
பஸ் மோதி பலியான முபின்தாஜ் ரோட்டில் பிணமாக கிடக்கும் பரிதாப காட்சி

ஈரோட்டில் ஆட்டோ, மொபட் மோதல்- ரோட்டில் விழுந்த பெண் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பலி

Published On 2018-11-24 11:52 GMT   |   Update On 2018-11-24 11:52 GMT
ஈரோட்டில் ஆட்டோ, மொபட் மோதியதில் தவறி விழுந்த பெண் மீது தனியார் பஸ் ஏறி இறங்கியதில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு பெரிய அக்ரஹாரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி முபின்தாஜ் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

முபின்தாஜ் பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் தனது மொபட்டில் ஈரோடு பெரிய அக்ரஹார வீதியில் இருந்து பழைய பாளையத்துக்கு சென்று வருவார்.

இன்று வழக்கம்போல் முபின்தாஜ் தனது மொபட்டில் பழைய பாளையம் சங்குநகர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னால் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. பின்னால் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஆட்டோவும் முபின்தாஜ் வந்த மொபட்டும் மோதிக்கொண்டன.இதில் நிலை தடுமாறிய முபின்தாஜ் ரோட்டில் விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த தனியார் பஸ்சின் சக்கரம் முபின்தாஜ் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முபின்தாஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்து காரணமாக அங்கு கூட்டம் கூடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முபின்தாஜின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அவர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

மனைவி முபின்தாஜ் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுத அவரது கணவர்

விபத்து காணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் முபின்ராஜின் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News