செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

Published On 2018-11-22 07:56 GMT   |   Update On 2018-11-22 07:56 GMT
துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport
அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவும் துபாய் விமானம் மதுரை வந்தது.

அந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து விமானத்தில் வந்த 120 பயனாளிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.


அப்போது 2 பயணிகள் சூட்கேஸ்களில் தங்க கட்டிகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் சூட்கேஸ்களுடன் பெருங்குடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் சூட்கேசில் இருந்த தங்க கட்டிகளை கைப்பற்றியபோது ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #MaduraiAirport #GoldSmuggling
Tags:    

Similar News