செய்திகள்

புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும்- ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published On 2018-11-17 06:28 GMT   |   Update On 2018-11-17 06:28 GMT
புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். #gajacyclone #pchidambaram #CentralCommittee

காரைக்குடி:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. இங்கு மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.

உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை குறைவாக இருந்தாலும் அது நல்ல தொகை தான்.


புயல் பாதிப்பு குறித்து மாநில அரசு அறிக்கை அனுப்பிய பிறகே மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்கும். அந்த குழு சேத மதிப்பீட்டை கணக்கீட்டு அறிக்கை அளிக்கும். அதன் படி நிவாரணம் வழங்கப்படும்.

ஆனால் மத்திய குழுவை தற்போது உடனே அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக அரசும் இதனை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone #pchidambaram #CentralCommittee 

Tags:    

Similar News