செய்திகள்
கர்ப்பிணி பெண்ணுக்கு கொலை மிரட்டல்- காதல் கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார்
ராமநாதபுரத்தில் காதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் ராஜா.இவரும் இதே கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவை சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா பெற்றோரை பார்க்க விரும்பியதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்துள்ளனர்.
அதன் பின்னர் ராமநாதபுரம்அருகே சக்கரகோட்டையில் வாடகை வீடு பிடித்து தங்கி வந்தனர். சில மாதங்களாக குமார் ராஜா வேலைக்குச் செல்லவில்லை. இதனை சண்முக பிரியா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார்ராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கணவர் குமார்ராஜா, மாமியார் ராஜம்மாள், உறவினர் செல்வம் ஆகிய 3 பேர் மீது கேணிக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ராமநாதபுரம் அருகே நொச்சிவயல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் ராஜா.இவரும் இதே கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவை சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா பெற்றோரை பார்க்க விரும்பியதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்துள்ளனர்.
அதன் பின்னர் ராமநாதபுரம்அருகே சக்கரகோட்டையில் வாடகை வீடு பிடித்து தங்கி வந்தனர். சில மாதங்களாக குமார் ராஜா வேலைக்குச் செல்லவில்லை. இதனை சண்முக பிரியா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார்ராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கணவர் குமார்ராஜா, மாமியார் ராஜம்மாள், உறவினர் செல்வம் ஆகிய 3 பேர் மீது கேணிக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews