செய்திகள்
காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் டெங்கு கொசு ஆய்வு- ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்
காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
மாவட்ட கலெக்டர் பொன்னையா குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் பகுதியில் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதத்தை கலெக்டர் பொன்னையா விதித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.
இதேபோல் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். இதில் ஒரு வீட்டின் தொட்டியில் கொசு உற்பத்தியாகும் ஆதாரம் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
மாவட்ட கலெக்டர் பொன்னையா குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் பகுதியில் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதத்தை கலெக்டர் பொன்னையா விதித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.
இதேபோல் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். இதில் ஒரு வீட்டின் தொட்டியில் கொசு உற்பத்தியாகும் ஆதாரம் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.