செய்திகள்

விராலிமலை அருகே இன்று கார் மோதி சிறுவன் பலி

Published On 2018-10-27 16:45 GMT   |   Update On 2018-10-27 16:45 GMT
விராலிமலை அருகே சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூம்மரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவண பெருமாள். விவசாயி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 4). இவன் இன்று காலை கீரனூர்-விராலிமலை சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர் பாராதவிதமாக ஸ்ரீதர் மீது மோதியது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.  

இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருச்சி கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் யாசப்அரபத் (வயது 34) என்பதும், அவர் ஆவூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் இன்று காலை பணிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்தது என தெரியவந்தது.

இது குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News