செய்திகள்

ஆவடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-23 05:02 IST   |   Update On 2018-10-23 05:02:00 IST
ஆவடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:

ஆவடியை அடுத்த கோவில்பதாகை முல்லை நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் ஆவடியில் உள்ள படை உடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் ரேணுகாதேவி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி படிப்பில் கவனம் செலுத்தாமல் தூங்கியதாக தெரிகிறது. இதனால் அவரை அனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகாதேவி நேற்று காலை வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News