செய்திகள்

மகன் தனிக்குடித்தனம் சென்றதால் தாய் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-10-04 14:48 GMT   |   Update On 2018-10-04 14:48 GMT
திருச்சி அருகே மகன் தனிக்குடித்தனம் சென்றதால் மனவேதனை அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அலகாப்பட்டி கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 46). இவரது மனைவி மலர்கொடி(41). இவர்களது மகன் சிவா(25). 

இந்நிலையில் சிவாவிற்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சிவா தனது மனைவியுடன் தனி குடித்தனம் சென்று விட்டார். 

இதனால் மனவேதனை அடைந்த  மலர்கொடி மகன் சிவாவிடம் நாம் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு சிவா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மலர்கொடி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். 

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News