செய்திகள்

காட்பாடி தாசில்தார் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2018-10-01 16:10 IST   |   Update On 2018-10-01 16:10:00 IST
காட்பாடி தாசில்தார் வீட்டில் புகுந்து 70 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

வேலூர்:

காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் ஆராக்கியசாமி (வயது 45). ஓசூரில் நெடுஞ்சாலைதுறை தனிதாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆக்சிலியம் கல்லூரியில் ஆசிரியையாக உள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். இதனை பயன்படுத்தி கொண்ட மர்மகும்பல் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வந்த ஆரோக்கியசாமி குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News