செய்திகள்

திருவாரூர் மாவட்டத்துக்கு 3-ந் தேதி கவர்னர் வருகை

Published On 2018-09-30 16:33 GMT   |   Update On 2018-09-30 16:33 GMT
தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார்.
திருவாரூர்:

தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார். திருவாரூர் விளமலில் உள்ள சுற்றுலா மாளிகையில் 3-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4.20 வரை தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கவர்னர் கோரிக்கை மனு பெறுகிறார். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News