செய்திகள்

ஆட்டோ - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து - சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்

Published On 2018-09-26 16:16 GMT   |   Update On 2018-09-26 16:16 GMT
திருவாரூர் அருகே மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது40). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் ஆலத்தாங்குடியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவருடைய மனைவி செல்வி, செல்வேந்திரன் மகள் தீபிகா (3) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கமலாபுரத்தில் இருந்து கண்கொடுத்தவனிதம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆலவாய் பண்ணைக்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நீலனூரை சேர்ந்த சுரேஷ் (32), ஆட்டோவில் பயணம் செய்த சிறுமி தீபிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீபிகா திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுரேசுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News