செய்திகள்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கணவருடன் தகராறு - இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-09-23 12:24 GMT   |   Update On 2018-09-23 12:24 GMT
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கணவருடன் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சிவா விஷ்ணு கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீதா (வயது29). நேற்று இரவு செந்தில்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி சீதாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த சீதா வீட்டில் இருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News