செய்திகள்

மத்தூரில் கட்டிட தொழிலாளி வீட்டில் கொள்ளை

Published On 2018-09-21 14:31 GMT   |   Update On 2018-09-21 14:31 GMT
மத்தூரில் கட்டிட தொழிலாளி வீட்டில் கொள்ளையர்கள் நகை , வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர். மேலும் 3 வீடுகளில் புகுந்த அவர்கள் வீட்டில் ஒன்றும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ்வீதியை சேர்ந்தவர் சம்பத், கட்டிட தொழிலாளி. இவர் பெங்களூருவில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டார். இவரது வீட்டு பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, கொலுசு உள்ளிட்ட கால் கிலோ வெள்ளி பொருட்கள் 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர். 

இதுகுறித்து சம்பத்தின் மனைவி அமராவதி மத்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

மேலும் சம்பத் வீட்டில் கொள்ளை நடந்த அதே நாளில் கொள்ளையர்கள் மத்தூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த அஞ்சலி (வயது 35), பொன்னி (65), மத்தூர் கீழ்வீதியை சேர்ந்த சரவணன் (40) ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அந்த வீடுகளில் ஒன்றும் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்தும் மத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News