செய்திகள்
கருணாநிதியின் நண்பர் மரணம் - முக ஸ்டாலின் இரங்கல்
கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணமடைந்ததையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #MKStalin
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
தனிச்சிறப்பு வாய்ந்த தமிழறிஞரும், மொழிப் போராட்ட வீரருமான புலவர் கீ.த.பச்சையப்பன் தனது 84-வது வயதில் மறைவடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கலைஞரின் இளமைக்காலம் தொட்டே உற்ற நண்பராக விளங்கியவரும், புகழ் பெற்ற தனித்துவம் வாய்ந்த பாரி நாதசுரம் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவரும், திருவாரூர் தென்னனின் சகோதரரும், அரிய கலைஞருமான திருவாரூர் செல்வகணபதி தனது 94-ம் வயதில் மறைவுற்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
தனிச்சிறப்பு வாய்ந்த தமிழறிஞரும், மொழிப் போராட்ட வீரருமான புலவர் கீ.த.பச்சையப்பன் தனது 84-வது வயதில் மறைவடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கலைஞரின் இளமைக்காலம் தொட்டே உற்ற நண்பராக விளங்கியவரும், புகழ் பெற்ற தனித்துவம் வாய்ந்த பாரி நாதசுரம் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவரும், திருவாரூர் தென்னனின் சகோதரரும், அரிய கலைஞருமான திருவாரூர் செல்வகணபதி தனது 94-ம் வயதில் மறைவுற்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin