செய்திகள்

காதல் தோல்வியால் மெக்கானிக் தற்கொலை

Published On 2018-09-16 16:12 GMT   |   Update On 2018-09-16 16:12 GMT
திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் எட்வின் சகாயராஜ். இவரது மகன் அந்தோணி (வயது 24), ஏ.சி.மெக்கானிக். இவர் சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சாந்தியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இது குறித்து சாந்தி போனில் அந்தோணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தோணி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 5ந் தேதி ஏ.சி. எந்திரங்களை சுத்தம் செய்ய உதவும் திராவகத்தை குடித்துள்ளார். ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 2 நாட்கள் இருந்துள்ளார். அடுத்த 2 நாட்களில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

அவர்கள் அந்தோணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
Tags:    

Similar News