செய்திகள்

நெல்லித்தோப்பில் மின்சாரம் தாக்கி உடல் கருகிய இளம்பெண் பலி

Published On 2018-09-16 11:51 GMT   |   Update On 2018-09-16 11:51 GMT
நெல்லித்தோப்பில் மின்சாரம் தாக்கி உடல் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்தவர் ரொசாரியோ. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று விக்டோரியா வீட்டின் மொட்டை மாடியில் துணி காய வைக்க சென்றார்.

ஈரத்துணியை விசிறும்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடி வழியே சென்ற உயர்மின்அழுத்த கம்பியில் துணி பட்டதால் விக்டோரியாவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில் விக்டோரியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விக்டோரியா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News