செய்திகள்

பாரதியார் சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

Published On 2018-09-11 11:37 GMT   |   Update On 2018-09-11 11:37 GMT
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ளபாரதியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். #Narayanasamy #congress
புதுச்சேரி:

புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசறிடிக்கப்பட்டது.

இதனையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ளபாரதியார் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், கீதா ஆனந்த் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநிலத் துணைத் தலைவர் சோம சுந்தரம் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் நிர்வாகிகள் கணேசன், சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுவை கலை, இலக்கிய, பண்பாட்டு பேரவையினர் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். #Narayanasamy #congress
Tags:    

Similar News