செய்திகள்

பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2018-09-08 12:31 GMT   |   Update On 2018-09-08 12:31 GMT
பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவரது அண்ணன் மகன் ஹேமன் (15). அதே பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (20). முன்விரோதம் காரணமாக ஹேமனை, கவுதமன் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவுதமனிடம் சென்று ஏன் எனது அண்ணன் மகனை தாக்கினாய் என விஜய் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுதமன் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜய் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்னுபிரியா வழக்குபதிவு செய்து கவுதமனை கைது செய்தார். #tamilnews
Tags:    

Similar News