செய்திகள்

பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரி, மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2018-09-08 12:25 GMT   |   Update On 2018-09-08 12:25 GMT
பண்ருட்டி அருகே மணல் கடத்தியதாக லாரி மற்றும் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதிபெறாமல் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த மேல்குமாரமங்களத்தை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி திருவதிகை பாலூர்ரோட்டில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டியை ஓட்டிவந்த ரமேஷ் (35), சக்திவேல் (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News