கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யவன்ஷி 175: இங்கிலாந்துக்கு 412 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2026-02-06 17:16 IST   |   Update On 2026-02-06 17:16:00 IST
  • சூர்யவன்ஷி ஸ்கோரில் தலா 15 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.
  • அவருக்கு அடுத்தப்படியாக ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் சேர்த்தார்.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். 71 பந்தில் 150 ரன்னைக் கடந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்கும். சூர்வன்ஷி ஆட்டமிழக்கும்போது இந்தியா 25.2 ஓவரில் 251 ரன்கள் குவித்திருந்தது.

அதன்பின் வந்த வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.

கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.

பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

Similar News