செய்திகள்
ஆம்பூரில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகம்மது பாஷா (வயது 30). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர், அகம்மது பாஷாவின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றார்.
இதனை கவனித்த அக்கம், பக்கத்தினர் திருட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்ததும், ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்த ஆதித்யன் மகன் பிரபுசங்கர் என்கிற முகம்மது பிலால் (30) என்பது தெரியவந்தது.
கொள்ளையடிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகம்மது பிலாலை கைது செய்தனர்.
ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகம்மது பாஷா (வயது 30). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர், அகம்மது பாஷாவின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றார்.
இதனை கவனித்த அக்கம், பக்கத்தினர் திருட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்ததும், ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்த ஆதித்யன் மகன் பிரபுசங்கர் என்கிற முகம்மது பிலால் (30) என்பது தெரியவந்தது.
கொள்ளையடிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகம்மது பிலாலை கைது செய்தனர்.