செய்திகள்

பண்ருட்டியில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்- கட்டிட தொழிலாளி கைது

Published On 2018-09-07 10:11 GMT   |   Update On 2018-09-07 10:11 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் முருகன் (39) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கும் பணியை முருகன் மேற்கொண்டு வருகிறார். சுப்பிரமணியனுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை திருவதிகை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் முருகன் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுப்பிரமணி தனக்கு உடனடியாக சம்பளம் தருமாறு முருகனிடம் கேட்டார்.

தற்போது சம்பளம் தர முடியாது என முருகன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதில் காயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து பண்ருட்டி போலீசில் சுப்பிரமணியனின் சகோதரர் அசோக் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்ரியா வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார்.
Tags:    

Similar News