செய்திகள்

தளி அருகே வாலிபர் மாயம்- தந்தை போலீசில் புகார்

Published On 2018-09-03 15:06 GMT   |   Update On 2018-09-03 15:06 GMT
தளி அருகே வெளியில் சென்ற வாலிபர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சசிகுமார் (வயது 23). இவர் தளியில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் சசிகுமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சசிகுமாரை உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சசிகுமாரின் தந்தை ராஜப்பா தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சசிகுமாரை தேடி வருகின்றார். சமூக விரோதிகள் யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News