செய்திகள்

வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

Published On 2018-09-02 12:21 GMT   |   Update On 2018-09-02 12:21 GMT
வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையை சேர்ந்த பழனி என்பவர் மகள் சரஸ்வதி (வயது 21). இவருக்கும், கத்தரிப்புலத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சரஸ்வதி கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே சரஸ்வதிக்கும், செம்போடையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் செல்வகுமாருக்கும், அவரது உறவு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த சரஸ்வதி தன்னை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி செல்வகுமார் ஏமாற்றிவிட்டதாக வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பின்னர் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

Tags:    

Similar News