செய்திகள்
தரங்கம்பாடி அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை
தரங்கம்பாடி அருகே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews