செய்திகள்

குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2018-08-27 16:14 GMT   |   Update On 2018-08-27 16:14 GMT
குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தாயும், மகளும் காயம் அடைந்தனர்.

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், விவசாயி. இவரது மனைவி கீதா என்கிற அகிலாண்டேஸ்வரி (வயது 37). இவர்கள் நேற்று முன்தினம் இரவு 2 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் டவுன் பிச்சனூர் வாரியார் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

வாரியார் நகர் பகுதியில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் நிலைத்தடுமாறி 3 பேரும் கீழே விழுந்துள்ளனர்.

பின்னர் 5 பவுன் நகையுடன் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கீழே விழுந்ததில் கீதாவிற்கு தலையிலும், குழந்தைக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். 
Tags:    

Similar News